சாயர்புரம் பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத பவனி

ஏரல், டிச. 12: சாயர்புரம் தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத பவனி நடந்தது.  பள்ளித் தாளாளர் இவாஞ்சலின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை கலைச்செல்வி சைமன் வரவேற்றார். சாயர்புரம் சேகரகுரு ஜோசப் இஸ்ரவேல் ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். இதில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கிறிஸ்துமஸ் கீத ஆராதனையும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றி நாடகம் மூலம் எடுத்து கூறினர்.

நிகழ்ச்சியில் சேப்லியன் எலிசபெத் மற்றும் மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: