நாசரேத், நவ.14: தொடர் மழையினால் நாசரேத் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியதால் விவசாய பணி தீவிரமாக நடந்து வருகிறது.நாசரேத் பகுதிகளான வெள்ளமடம் பெரியகுளம், நொச்சிகுளம், பிள்ளையன்மனைகுளம், முதலைமொழிகுளம், புதுக்குளம் கடந்த சில மாதங்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. இந்நிலையில் கடந்த இருவாரங்களுக்கு முன் புயல் சின்னத்தால் பருவமழை பெய்தது. இதையடுத்து குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெரியகுளம், நொச்சிகுளம், பிள்ளையன்மனைகுளம், முதலைமொழிகுளம், புதுக்குளம் நிரம்பின. கடந்த 3 நாட்களாக வெள்ளரிக்காயூரணி புதுக்குளம் நிரம்பி பிரகாசபுரம் மறுகால் தாண்டி தண்ணீர் விழுகிறது.