தூத்துக்குடியில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு

தூத்துக்குடி, நவ.13:தூத்துக்குடியில் ஒத்தி வைக்கப்பட்ட 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு வரும் 18ம்தேதி நடக்கிறது. 2019ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த 2ம்நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 6ம்தேதி முதல் 8ம்தேதி வரை தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் முதல்கட்ட உடற்கூறு தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு கடந்த 9, 11, 12ம்தேதிகளில் நடக்க இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு  பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தின் உத்தரவின் பேரில் வருகிற 18ம்தேதி முதல் 20ம்தேதி வரை நடக்க உள்ளது.

18ம்தேதி தூத்துக்குடியை சேர்ந்த ஆண்களும், 19ம்தேதி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த ஆண்களும், 20ம்தேதி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த பெண்களுக்கும் நடக்க உள்ளது. இதனை அழைப்பாணையாக கருதி காலை 6 மணிக்கு தருவை மைதானத்திற்கு வர வேண்டும் என மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார்.

Related Stories: