திருச்செந்தூர் அருகே வாலிபர் கொலையில் இருவர் கைது

திருச்செந்தூர், நவ. 6: திருச்செந்தூர் அருகே வாலிபர் கொலையில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.   திருச்செந்தூர்  அருகே ராணி மகாராஜபுரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்துநாடார்  மகன் வேல்குமார். கூலி தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த கேசவன் மனைவி லட்சுமியை அவதூறாக பேசியுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த கேசவன் மற்றும் அவரது நண்பரான ரஸ்தா தெருவைச்  சேர்ந்த முத்துசெல்வம் (25) ஆகியோர் கடந்த 3ம் தேதி இரவு வேல்குமாரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்றனர்.

 இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய கேசவன், முத்துசெல்வத்தை பிடிக்க டிஎஸ்பி பாரத் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன்,  எஸ்ஐ செந்தில்முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.   இந்நிலையில் திருச்செந்தூர்- காயல்பட்டினம் மெயின்ரோட்டில் மரக்கடை பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று காலை கைதுசெய்தனர். பின்னர் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: