கூலித்தொழிலாளியை மிரட்டிய இருவர் கைது

தூத்துக்குடி, நவ. 5: தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் சாம்சன் தங்கராஜ் (41). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் திரு.வி.க. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக 2 பேர் பைக்கில் அதிவேகமாக சென்றனர். அவர்களை சாம்சன் தங்கராஜ் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சாம்சன் தங்கராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெள்ளக்கோவிலை சேர்ந்த அபிஷேக்(29), கோரம்பள்ளத்தை சேர்ந்த ராஜேஷ்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: