தூத்துக்குடி, அக்.2: தூத்துக்குடியில் பெண் கஞ்சா வியாபாரி மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.தூத்துக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நாகூர்ஹனிபா. இவரது மனைவி லைலா என்ற பாத்திமா (46). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது தாளமுத்துநகர், வடபாகம் போலீஸ் நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் மற்றும் நகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி பஞ்சவர்ணம் மற்றும் அவரது கூட்டாளிகளை தாளமுத்துநகர் போலீசார் கூண்டோடு கைது செய்தனர். அதில் பாத்திமாவும் ஒருவர். இதனையடுத்து பாத்திமா நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.