குளத்தூர், செப். 11: குளத்தூர் பகுதி கிராமங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிப்பிகுளம் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. குளத்தூர், குளத்தூர் காலனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கு.சுப்பிரமணியபுரம், வீரபாண்டியாபுரம், த.சுப்பையாபுரம், முத்துராமலிங்கபுரம், வேடநத்தம், புளியங்குளத்தில் கடந்த 2ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பஜனைகள், பாட்டு கச்சேரி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் குளத்தூரில் அன்னதானம் நடந்தது.