அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு பணிநிறைவு பாராட்டு விழா

குளத்தூர், ஜூன் 26: வேப்பலோடை அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு பணிநிறைவு பாராட்டுவிழா நடந்தது. குளத்தூர் அருகேயுள்ள வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாக பணியாற்றிய சுலோச்சனா, அறிவியல் ஆசிரியை மணிமேகலா, சமூகஅறிவியல் ஆசிரியை சைலஷா ஆகியோர் பணிநிறைவு பெற்றதையடுத்து பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி பேசினார். இயற்பியல் ஆசிரியை ஜாய்பிரியா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனியசாமி, தேன்ராஜ், பாலகிருஷ்ணன், துரை, சமூகசேவகர் முனியசாமி, முருகானந்தம், கருப்பசாமி, புங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்னை தெரசா சங்க செயலாளர் ஜேம்ஸ்

அமிர்தராஜ், பொருளாளர் முத்துகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியை புளோரிடா, பெனிலா, சமூகசேவகர் ராகவன், ஆசிரியர் செல்வக்குமார், தங்கமயில் மேலாளர் ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணிநிறைவு பெற்ற ஆசிரியைகளுக்கு பள்ளியின் சார்பிலும், அன்னைதெரசா கிராம பொதுநல சங்கத்தின் சார்பிலும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories: