உடன்குடி, ஜூன் 18: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என பாரதிய வியாபாரி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பாரதிய வியாபாரிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி தாண்டவன்காடு ரோட்டில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது. திருச்செந்தூர் நகரத் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளார் சசிகுமார், மாவட்டச் செயலாளர் சரவணன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் இசக்கி, மாவட்ட நிர்வாகிகள் பால்ராஜ், மாரியப்பன், முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.