கல்லூரி மாணவி மாயம்

நாசரேத், ஜூன் 18: நாசரேத்தில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். நாசரேத்-  வகுத்தான்குப்பம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் தனசேகரன். ஐஸ்கிரீம் வியாபாரி. இவரது மகள் ஹேமலி ஷெரின் (18). சாயர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த இவர், கடந்த 9ம் தேதி அத்தை சுமதி வீட்டிற்கு செல்வதாகக் கூறி சென்றபோது மாயமானார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, மாயமான மாணவியைத் தேடி வருகிறார்.

Related Stories: