போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்-ஏரல் சாலை

நாசரேத் மே 24:  போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்- ஏரல் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத்-ஏரல் இடையே உள்ள குளத்துக்குடியிருப்பு, கடையனோடை, சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாகவும், பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் பஸ்கள், லாரிகள் மற்றும் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் படாதபாடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள நாசரேத்-ஏரல் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: