தூத்துக்குடி, மே 21: துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தவிடாமல் முடக்க நினைத்தால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான கிருஷ்ணமூர்த்தி, தலைமையிலானவர்கள் தங்களுக்கு போலீசார் அனுப்பியுள்ள இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் தொடர்பான சம்மனுடன் தூத்துக்குடி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து அறவழியில் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.