நாசரேத் யோவான் மகளிர் பள்ளி அரசு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி

நாசரேத், மே 10: நாசரேத் தூய யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளி 10, 11, 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.  இப்பள்ளியில் பயின்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 185 மாணவிகளும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 207 மாணவிகளும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 245 மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனர். இது 100 சதவீதம் தேர்ச்சியாகும். வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளையும் பள்ளித் தாளாளர் சாந்தகுமாரி, தலைமை ஆசிரியை சில்வியா ரேச்சல் மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டினர்.

Related Stories: