ஓட்டபிடாரம், மே 3: பசுவந்தனை அருகே விவசாயி வீட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் 7 பவுன் நகை கொள்ளை போனது. பட்டப்பகலில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள சில்லாங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(59) விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி(50). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். திருமணமாகவில்லை. சந்திரசேகருக்கு புளியம்பட்டி பகுதியில் பரிவல்லிக்கோட்டையில் தோட்டம் உள்ளது. அங்கு தங்குவதற்கு சிறிய வீடும் கட்டியிருக்கிறார். கடந்த 30ம்தேதி சந்திரசேகர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்றார். அங்கு தங்கிவிட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.