திருச்செந்தூர், ஏப். 30: திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் பைக்கில் மோதியதில் தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர். நெல்லை பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52) பெயிண்டர். இவரது மனைவி கோமு. தம்பதிக்கு 2 மகன்கள். இதே போல் கயத்தாறு, கோட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மீனாட்சி (42) என்பவருக்கு பிரமு என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஆறுமுகமும், மீனாட்சியும் பணி நிமித்தமாக நேற்று திருச்செந்தூருக்கு வந்துவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கை ஆறுமுகம் ஓட்டிவந்தார். திருச்செந்தூர் அடுத்த ராணிமகாராஜபுரம் பாலம் அருகே சென்றபோதுதறிகெட்டு ஓடிய பைக் சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.