சாத்தான்குளம், மார்ச் 26: சாத்தான்குளம் செயின்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி 24ம் ஆண்டுவிழா நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி தலைமை வகித்தார். உதவி சேகரகுரு ஷீலாபாஸ்கர் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி முதல்வர் சார்லஸ் ஞானக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சிகளை ஆசிரியை பிரவீனா தொகுத்து வழங்கினார். விழாவில் முதலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அன்றனி, முத்துக்கிருஷ்ணாபுரம் ராஜ்மோகன், டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லெட்சுமி நாராயணன், வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலாளர் மகாபால்துரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.