தூத்துக்குடி,மார்ச் 26: தூத்துக்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழி பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பேரணியில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.தூத்துக்குடியில் நேற்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்காக அவர் கூட்டணி கட்சியினருடன் பேரணியாக வந்தார். தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து துவங்கிய பேரணி விவிடி சிக்னல், பாளை ரோடு, வேம்படி இசக்கியம்மன்கோவில், வஉசி கல்லூரி வழியாக வந்தது. இதில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏபிசிவி சண்முகம், மாவட்ட தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் அழகுமுத்துபாண்டியன், இயூமுலீக் மாவட்ட தலைவர் மீராசா, திக மாவட்ட தலைவர் பெரியாரடியான், சமகழகம் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி கிதர்பிஸ்மி, விசிக அகமது இக்பால், மநேமக மோத்தி, மநேஜக ஜாகிர்உசேன், ஐஜேக துரை பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை செண்பகராஜ், ஆதித்தமிழர் கட்சி சங்கர், வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாணவரணி அமைப்பாளர் ஜாண்அலெக்சாண்டர், துணை அமைப்பாளர் பாலகுருசாமி, மாவட்ட இளைஞரணி மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மகளிரணி கஸ்தூரிதங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் சிஎஸ்.ராஜா, கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாநரக இளைஞரணி ஆனந்தகேப்ரியேல்ராஜ், செல்வின், ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன்,