உடன்குடியில் கந்தூரி விழா

உடன்குடி, மார்ச் 21: உடன்குடி களம்புதுத்தெரு செய்குனா அஷ்செய்கு ஜதுரூஸ் புலவர் ஒலியுல்லா அப்பாவின் 191ம்ஆண்டு கந்தூரி விழா நடந்தது. இதையொட்டி மாலை 4மணிக்கு சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இரவு 7மணிக்கு மதரஸத்துல் காதிரிய்யா அல்முபீன் மதரஸா மாணவ, மாணவியர்களின் மார்க்க சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து பள்ளிவாசல் இமாம் முகமது ஹாசன் தலைமையில் அப்துல் லத்தீப், சக்கரியா, அக்பர்ஷா, யூசுப், பீர்முகமது, சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு போட்டி மற்றும் மார்க்க சொற்பொழிவு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முஹம்மது மஸ்தான், ஹமீது சுல்தான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இரவு 11 மணிக்கு மவுலூது ஷரீப் நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories: