பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு கனிமொழி எம்பி மரியாதை

தூத்துக்குடி, மார்ச் 1: தூத்துக்குடியில் பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு கனிமொழி எம்பி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், மகளிரணி மாநில செயலாளருமான கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். நேற்று தெற்கு மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட கனிமொழி எம்பி, இங்குள்ள பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன் பெரியசாமி, கோட்டுராஜா, சி.எஸ்.ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், ஜெயக்குமார் ரூபன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் பரமசிவன், மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரி தஙகம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், வக்கீல் அணி செயலாளர் மோகன்தாஸ்,  மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் கேப்ரியல்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசுவாமி, அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் பாலு, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, நிர்வாகிகள் கதிரேசன், சிங்கராஜ், சங்கர், நிர்மல்ராஜ், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: