நாலுமாவடியில் நாளை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மோகன் சி லாசரஸ் பங்கேற்பு

நாசரேத்,  பிப். 20: நாலுமாவடியில் நாளை (21ம் தேதி) நடக்கும் சிறப்பு  பிரார்த்தனை கூட்டத்தில் மோகன் சி லாசரஸ் பங்கேற்கிறார்.

 தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் அற்புத  விடுதலை பிரார்த்தனை கூட்டம் நாளை (21ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2  மணி வரை நடக்கிறது. இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள்  பாடுகின்றனர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ்  தேவசெய்தி கொடுத்து சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கிறார். குடும்ப  ஆசீர்வாதத்திற்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும் விசேஷ பிரார்த்தனை  நடக்கிறது.ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: