உடன்குடி,டிச.11: உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட சிவல்விளைபுதூரில் 7ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட சிவல்விளைபுதூரில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உடன்குடி, திருச்செந்தூர் பகுதிக்கு வரும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை சீரமைக்கப்பட்டு சுமார் 7ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மேலும் தெருவிளக்குகளும் எரியாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதோடு இரவில் வாகனஓட்டிகள், முதியவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.