தூத்துக்குடி, செப். 26: தூத்துக்குடியில் நாளை நடக்கவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அக்டோபர் 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நாளை (27ம் தேதி) நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தவிர்க்கமுடியாத நிர்வாக காரணங்களால், அக்டோபர் 5ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.