செங்கல்பட்டு: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரிகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.