சென்னை: கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கிற கூட்டணியாக இந்தியா கூட்டணி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் கடமை, பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது. மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் செயல்படக் கூடாது.
