சென்னை: த.வெ.க. தலைவர் விஜய், ஜனவரி 12ம் தேதி சிபிஐ முன் ஆஜராக உள்ளார். தவெக நிர்வாகிகளிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரணைக்கு ஆஜராக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக விஜய் ஜனவரி 11ம் தேதி டெல்லி செல்கிறார்.
