ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடக்கும் மலர் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து நீலகிரி கலெக்டர் அம்ரித் கூறியதாவது: இந்த ஆண்டு கோடை விழா மே 6ம் தேதி கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சியுடன் துவங்குகிறது. 6, 7 ஆகிய 2 நாட்கள் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படும். 10வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி கூடலூரில் மே 12ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும். 18வது ரோஜா கண்காட்சி ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் மே 13ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும்.