மும்பை: முன்னாள் முதல்வரும் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலைவருமான உத்தவ் தாக்கரேயை மும்பை புறநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். சிவசேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே மும்பை பாந்த்ராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் வசித்து வருகிறார். அவரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே மீது நடிகர் ரஜினி காந்த் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதே போல் அவரது குடும்பத்துடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் நேற்று பால்தாக்கரே மகனும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவை மாதோஸ்ரீ இல்லத்திற்கு சென்று ரஜினி சந்தித்து பேசினார்.