திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் உள்ள வளமீட்பு பூங்காவில் நடக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர்  மு.மாகின் அபுபக்கர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மக்கும் குப்பைகளான காய்கறி மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டார்.மக்காத குப்பைகளான துணி, செருப்பு, பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றை தரம்பிரித்து மறுசுழற்சி செய்ய அனுப்பி வைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.  மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து கொடுக்கவேண்டும் என ஒவ்வொரு வீட்டிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

மேலும் மண் புழு உரம் தயார் செய்யும் பணிகளையும் பார்வையிட்டு, அறிவுரை, ஆலோசனை வழங்கினார்.  பணிகளை திறன்படவும், தொய்வின்றியும் விரைவாக உரிய நேரத்தில் முடிக்குமாறு கூறினார். பணியாளர்கள் தேவையான பாதுகாப்பு உடைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.  ஆய்வின்போது, பேரூராட்சி தலைவர் உ.வடிவேலு, உதவி செயற்பொறியாளர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் தா.மாலா, உதவி பொறியாளர் இரா.சுபாஷினி, துப்புரவு மேற்பார்வையாளர் வே.பாண்டியன், திமுக நிர்வாகி வேலு மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: