அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: 2வது சுற்றில் பியான்கா

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்-1  போட்டி நடக்கிறது. ஆண்டின் முதல் தொடரான இதில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், மெத்வதேவ், ஆன்டி மர்ரே, ஃபெலிக்ஸ் அகுர் , வீராங்கனைகள் ஆன்ஸ் ஜெபவூர், அரினா சபலென்கா,  வெரோனிகா, ஜெலனா ஆஸ்டபென்கோ, கரோலினா பிளிஸ்கோவா  உட்பட பலரும் பங்கேற்று உள்ளனர்.

அடிலெய்டில் நேற்று தொடங்கிய போட்டியின் முதல் ஆட்டத்தில்  ஸ்பெயின் வீராங்கனை கர்பினி முகுருசா(29வயது, 55வது ரேங்க்), கனட வீராங்னை பியான்கா ஆண்ட்ரீஸ்கு(22வயது, 46வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதன் முதல் சுற்றை முகுருசா 6-0 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து டை பிரேக்கர் வரை நீண்ட 2வது செட்டை பியான்கா 7-6(6-3) என்ற கணக்கில் கைப்பற்றினார். அதனால் வெற்றி யாருக்கு என்பதை முடிவுச் செய்யும் 3வது செட்டையும்  பியான்கா 6-1 என்ற கணக்கில் தனதாக்கினார்.

எனவே  2 மணி 12 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற செட்களில் வெற்றிப் பெற்ற பியான்கா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் எஸ்டோனியா வீராங்கனை கயா கனேபி (37வயது, 32வது ரேங்க்) 2-1 என்ற செட்களில்  பெலாரஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை (28வயது, 30வது ரேங்க்) வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் அமெரிக்க வீரர் மார்கோஸ் கிரோன்(29வயது, 61வது ரேங்க்) 7-6(7-5), 6-7(6-4), 7-5 ஆகிய சுற்றுகளில்  பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு காஸ்கியூட்டை(36வயது, 68வது ரேங்க்) வீழ்த்தி 2வது சுற்று வாய்ப்பை பெற்றார்.

Related Stories: