மனைவியின் கேள்வி வாழ்க்கையை மாற்றியது: சூர்யகுமார் நெகிழ்ச்சி

 

மும்பை: இந்திய டி.20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் அளித்துள்ள பேட்டி: 2016ம் ஆண்டில் நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தபோது எங்களுக்குத் திருமணம் நடந்தது. நான் நன்றாக விளையாடி மகிழ்ந்துகொண்டிருந்தேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காகச் சேர்ந்த 2018 ம் ஆண்டு வரை அவள் எனது பயணத்தையும் அன்றாட வழக்கங்களையும் கூர்ந்து கவனித்து வந்தாள். அதன் பிறகு நாங்கள் சில விஷயங்களைச் சற்று வித்தியாசமாகச் செய்யத் தொடங்கினோம்.

என் வயதுப் பிரிவில் என்னுடன் விளையாடிய பலர் இப்போது இந்திய அணிக்காக விளையாடுகிறார்கள், உன் மனதில் என்ன இருக்கிறது?’ என்று அவள் என்னிடம் கேட்டாள். நானும் இந்திய அணிக்காக விளையாட விரும்பினேன் என்றேன். அதற்கான திட்டம் என்ன? என்று அவள் கேட்டாள். அன்று முதல் அதற்கான செயல்திட்டத்துடன் செயல்பட்டேன். ஐபிஎல்லில் தொடர்ந்து ரன் குவித்ததன் விளைவாக 2021ல் இந்திய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டேன்,” என்றார்.

Related Stories: