மாஸ்கோ: தெற்கு காகசஸ் மலைப்பகுதியில் உள்ள நகோர்னா - கராபாக் பகுதி, சர்ச்சைக்குரிய பகுதியாகும். இதை அஜர்பைஜான் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதற்கு அர்மீனியாவும் உரிமை கோரி வருகிறது. இந்த இடத்துக்காக இரு நாடுகளும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 1994ம் ஆண்டு முதல் அர்மீனியாவின் ஆதரவு பெற்ற அர்மீனிய இன பிரிவுகளின் கட்டுப்பாட்டில் இந்த இடம் உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே 6 வாரங்கள் நடந்த போரின்போது, அர்மீனிய இன பிரிவினர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நாகோர்னோ-கராபாக்கின் பெரும் பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியது.