ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி பகுதியில் வனத்துறை சார்பில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தன. இங்கு உள்ள யானைகளை கொண்டு பல்வேறு வன பணிகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் மூலம் சுற்றுலாப்பயணிகளுக்கு யானை சவாரியும் நடத்தப்படுகிறது. இதில், 71 வயதான விஜயலட்சுமி என்ற பெண் யானை டாப்சிலிப் அருகே உள்ள பணத்தாறு என்ற வனப்பகுதியில் இருந்து கடந்த 1973ம் ஆண்டு மீட்கப்பட்டு சுமார் 49 ஆண்டுகளாக வனத்துறை பராமரிப்பில் இருந்து வந்தது.