ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகளியாறு வனப்பகுதியில், நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடல் மெலிந்த நிலையில் பெண் யானை ஒன்று நின்றதை கண்டு அதனை கண்காணித்து வந்தனர். பல மணி நேரமாக அங்கிருந்து செல்ல முடியாமல் தவித்த யானை குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. ஆனால் யானை திடீரென மயங்கி விழுந்தது.
பின்னர் யானையை அருகில் சென்று பார்த்தபோது, ஆண் யானையுடன் ஏற்பட்ட சண்டையில், ஆண் யானை தந்தத்தால், பல இடங்களில் குத்திய காயங்கள் இருந்தது தெரியவந்தது.