மீனவர்களின் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தல்

டெல்லி: மீனவர்களின் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தடுக்கப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்பிதுரை கேட்டுக்கொண்டார். கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதிகளை இணைப்பதற்கு ஒன்றிய அரசுக்கு அவர் நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.

Related Stories: