புதுடெல்லி: `லடாக் எல்லையில் புதிய கட்டமைப்புகளை சீனா கட்டி வருவது கவலை தருகிறது,’ என்று ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கருத்தரங்கில் ராணுவ தளபதி நரவானே நேற்று பங்கேற்று ேபசியதாவது: லடாக் எல்லையில் சீனா படைகளை குவிப்பதும், மிகப் பெரிய அளவிலான புதிய கட்டமைப்புகளை கட்டுவதும் கவலை அளிக்கிறது. இதே நிலை நீடித்தால், அப்பகுதிகளில் அதே அளவிலான இந்திய ராணுவப் படைகள் நிறுத்தி வைக்கப்படும். சீனாவுக்கு சமமான உள்கட்டமைப்பையும் இந்தியாவும் செய்யும். சீனப்படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகள் ராணுவத்தினரின் முழு கண்காணிப்பில் உள்ளன.