சின்னாளபட்டி: சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி அருகே மலைக்கிராம மாணவர்கள் தங்கி படிக்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி உள்ளது. தற்போது 10, 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இங்கு தங்கி படித்து வருகின்றனர். மாணவர்கள் விடுதி அருகே சுமார் 100 அடி தூரத்திற்கு பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்துள்ளன. மேலும் அப்பகுதியை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக இப்பகுதியை பயன்படுத்துகின்றனர்.