சென்னை: காவல் துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட முதல்வர் அறிவுறுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல் துறை பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. காவல் துறையினர் பொதுமக்களை தாக்கும் செய்திகள் பத்திரிகைகள் மற்றும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும், பாதிக்கப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகுதான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பத்திரிகைகளில் வெளிவராத நிகழ்வுகள் நிறைய இருக்கக்கூடும். தவறு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.