திருவனந்தபுரம்: பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நலம் பெற வேண்டி சபரிமலையில் ஊழியர்கள் சங்கீத அர்ச்சனையும், சிறப்பு பூஜையும் நடத்தினர்.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் ஏராளமானோர் பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று காலை நாதஸ்வர சங்கீத அர்ச்சனைநடத்தப்பட்டது.தேவசம்போர்டு ஊழியரும், இசை கலைஞருமான சுகுணன், கணேஷ், யதுகிருஷ்ணன் ஆகியோர் சங்கீத அர்ச்சனை நடத்தினர்.