வருசநாடு: மயிலாடும்பாறையில், மூலவைகை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்துள்ளதால், விளைநிலங்ளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலாடும்பாறையில் மூலவைகை ஆற்றின் குறுக்கே, 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தடுப்பணை கட்டப்பட்டது. தரமற்ற பணியால் தடுப்பணை பக்கவாட்டு தடுப்புச்சுவர் ஒருபுறம் சேதமடைந்தது. இந்நிலையில், கடந்தாண்டு மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தடுப்பணை பக்கவாட்டு தடுப்புச்சுவர் மேலும் சேதமடைந்தது. இதனால், ஆற்று நீர் அருகில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.