வெலிங்டன்: நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பில் சிக்கிய இந்திய அமெரிக்க தம்பதி பலியானதால், அவர்களின் 3 குழந்தைகளும் அனாதைகளாகி உள்ளனர். அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் உள்ள ‘சேவா இன்டர்நேசனல்’ என்ற என்ஜிஓ அமைப்பின் தலைவராக இருந்தவர் பிரதாப் சிங். இவரது மனைவி மயூரி. இருவரும் இந்திய அமெரிக்கர்கள். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் இரட்டையர்களாக பிறந்த மகள்களும் உள்ளனர். இவர்கள் கடந்த மாதம் 9ம் தேதி, நியூசிலாந்தில் உள்ள வெள்ளை தீவுக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா சென்றனர். பிரதாப் சிங்கின் தாய் மற்றும் 3 குழந்தைகளும் கப்பலில் இருந்தனர்.