புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில், பாஜ எம்எல்ஏ.வால் கடத்தி, பலாத்காரம் செய்யப்பட்ட உன்னாவ் சிறுமி வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின், உன்னாவ் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாஜ. எம்எல்ஏ குல்தீப் செங்காரால் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து புகார் அளித்த சிறுமியின் தந்தை, போலீஸ் காவலில் இருக்கும் சந்தேகத்துக்குரிய முறையில் இறந்தார். மேலும், வழக்கு விசாரணைக்காக பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரது உறவினர்கள், வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு சென்றபோது அவர்கள் சென்ற வாகனத்தின் மீது லாரியை மோத செய்து, எம்எல்ஏ.வின் ஆதரவாளர்கள் விபத்துக்கு உள்ளாக்கினர்.