புதுடெல்லி: ‘பட்டாசுகளின் தரத்தை சோதிக்க, தரக்கட்டுப்பாடு வரையறை அமைப்பை உருவாக்குவது தொடர்பான விரிவான அறிக்கையை 15 நாளில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய மாற்றங்களை செய்து கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீர்ப்பை வழங்கியது. அதில், குறிப்பாக பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. ஆனால், பேரியம் இல்லாமல் பட்டாசு தயாரிக்கவே முடியாது என பெசோ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.