மக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா இருவரும் தங்களின் வீட்டருகே உள்ள லோதி சாலை வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இந்த புகைப்படத்தை வதேரா தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். அப்போது, தனது புகைப்படத்துடன், இந்திய தேசியக் கொடி என நினைத்து பராகுவே நாட்டு தேசிய கொடியின் படத்தை தவறாக பதிவிட்டார்.