திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதற்காக தந்திரி குடும்பம் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தினருடன் நாளை ஆலோசனை நடத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீர்மானித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து பிரச்னையின் தீவிரத்தை குறைக்க தேவசம்போர்டுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் கேரள அரசு பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் தந்திரி குடும்பத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.