கவுதமுக்கு பிரியா வேண்டுகோள்

சிம்பு ஹீரோவாக நடித்துள்ள ‘பத்து தல’ படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கும் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்த பிரியா பவானி சங்கர் கூறுகையில், ‘இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா பொறுமைசாலி மட்டுமின்றி, மன உறுதியும் கொண்டவர். சிலம்பரசனில் இருந்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வரை அனைவருக்கும் சம மரியாதை கொடுத்தார். கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் படங்களைப் பார்க்கும்போது, எங்கே அவர் நடிப்பு, நடிப்பு என்று டைரக்‌ஷன் செய்வதை நிறுத்திவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.

தயவுசெய்து அவர் இன்னும் பல படங்களை இயக்க வேண்டும். மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதைகளைப் படித்திருக்கிறேன். அவர் நடித்த படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு வழங்கிய இயக்குனருக்கு நன்றி. நான் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகை. கடவுள் எங்களுக்காகவே அவரை ஸ்பெஷலாகப் படைத்திருக்கிறார். அவரது இசையில் என் முகம் திரையில் வருவது குறித்து அதிக மகிழ்ச்சி. என் தோழி மஞ்சிமா மோகனின் காதல் கணவர், கவுதம் கார்த்திக். அவர்களுக்கு எனது பேரன்பு உரித்தாகட்டும். ஷூட்டிங்கில் சிலம்பரசனுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்றார்.

Related Stories: