நான் 2வது ஹீரோயினா?: மாளவிகா மோகனன் கோபம்

சென்னை: பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்’ தெலுங்கு படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார் என தகவல் பரவியது. அதேபோல், மற்றொரு தெலுங்கு படத்தில் 2வது ஹீரோயினாக மாளவிகா நடித்து வருவதாகவும் இதன் படப்பிடிப்பில் மாளவிகாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும் தகவல்கள் பரவியது. இந்த தகவலை கேள்விப்பட்டு மாளவிகா மோகனன் கோபம் அடைந்திருக்கிறார். தன்னை இழிவுபடுத்தும் வகையில் இதுபோன்ற பொய் தகவல்களை சிலர் கிளப்புவதாக கூறிய மாளவிகா மோகனன் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நான் பவன் கல்யாண் மீது மரியாதை வைத்து இருக்கிறேன். ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். பவன் கல்யாணின் படத்தில் நான் நடிக்கவில்லை. அதே சமயம் இன்னொரு தெலுங்கு படத்தில் நடிப்பது உண்மைதான். அதில் 2 ஹீரோயின்கள் நடிப்பதும் உண்மைதான். ஆனால், நான் 2வது ஹீரோயின் கிடையாது. நான்தான் முதன்மை ஹீரோயின். இது புரளி கிளப்புபவர்கள் தெரிந்து கொள்ளட்டும்’ என்றார். தமிழில் கடைசியாக மாறன் படத்தில் தனுஷுடன் மாளவிகா மோகனன் நடித்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: