யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மோதல்?

‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களின் வெற்றி மற்றும் வசூல் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ளார், கன்னட முன்னணி நடிகர், யஷ். அவரும், ஸ்ரீநிதி ஷெட்டியும் ‘கேஜிஎஃப்’ 2 பாகங்களிலும் ஜோடி சேர்ந்து நடித்தனர். இப்படங்களின் வெற்றிக்குப் பிறகு ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பல்வேறு மொழிகளில் புதுப்பட வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். தமிழில் ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், ‘கேஜிஎஃப்’ படங்களின் ஷூட்டிங்கில் ஸ்ரீநிதி ஷெட்டியை யஷ் துன்புறுத்தி தொல்லை கொடுத்ததாகவும், அவரிடம் யஷ் தவறாக நடந்துகொண்டதாகவும், இதனால் இனி அவருடன் இணைந்து நடிப்பதில்லை என்று ஸ்ரீநிதி ஷெட்டி முடிவு செய்திருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்த ஸ்ரீநிதி ஷெட்டி கூறுகையில், ‘சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

யஷ் ஒரு சிறந்த மனிதர். எந்த நிலையிலும் எனக்கு தொந்தரவு கொடுத்ததில்லை. யஷ்சுடன் இணைந்து நடிக்கும்போது, எனக்கு எந்த அசவுகரியமும் ஏற்படவில்லை. யஷ் ஒரு ஜென்டில்மேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. நான் எப்போதும் யஷ் ரசிகையாகவே இருப்பேன்’ என்றார்.

Related Stories: