மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படங்கள், வெப்தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்து வரும் டாப்ஸி, தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட சில அவமானங்களைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, இந்திய அளவில் நடந்த பல்வேறு அழகிப் போட்டி களில் பங்கேற்று இருக்கிறேன். அப்போது அங்கு போட்டியாளர்கள் மற்றும் போட்டியின் நடுவர் களுக்கு இடையே நடைபெற்ற ‘அரசியலை’ பார்த்து எனக்கு அருவெறுப்பு ஏற்பட்டது. அதை நேரடியாகப் பார்த்து மனவேதனை அடைந்தேன். போட்டி நடந்த நேரத்தில் எனது சுருட்டை தலைமுடியைப் பார்த்து அங்குள்ள பலர் கிண்டல் செய்தனர்.