புலமைப்பித்தன் பேரன் ஹீரோவாக அறிமுகமாகிறார்

சென்னை: சன் லைட் சினிமாஸ் சார்பில் துரைமுருகன் தயாரித்து இயக்கி இருக்கும் படம், ‘எவன்’. திலீபன், தீப்தி மானே, ஜே.கே.சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானா பாலா, பாண்டி ரவி நடித்திருக்கின்றனர். சிவராமன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.சசிதரன் இசை அமைத்துள்ளார். புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானா பாலா, ஏகா ராஜசேகர் ஆகிய நால்வரும் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படம் குறித்து துரைமுருகன் கூறுகையில், ‘ஹீரோ தனது அம்மாவுக்காக உயிரையும் கொடுப்பார், உயிரையும் எடுப்பார் என்பது படத்தின் கதை. சென்னை கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்ற திலீபன், மறைந்த புலவர் புலமைப்பித்தன் பேரன். படத்தில் 20வது மாடியில் இருந்து கீழே குதிக்கும் ஒரு காட்சியில், டூப்பை பயன்படுத்தாமல் தானே குதித்தார். இரு சக்கரம் மற்றும் நான்கு  சக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்யும் திறமை படைத்த அவர் நடித்த ‘எவன்’ படம், வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதியன்று திரைக்கு வருகிறது’ என்றார்.

Related Stories: