புஷ்பா பட பாடலுக்கு இனி ஆட மாட்டேன்: ராஷ்மிகா

பெங்களூரு: நடிகை ராஷ்மிகா பேட்டி ஒன்றில், ‘தனது குழந்தை பருவத்தில் பெற்றோர் பொருளாதார ரீதியாக சந்தித்த நெருக்கடிகள்’ குறித்து பேசியுள்ளார். ‘வாடகை கொடுக்க முடியாமல் 2 மாதத்துக்கு ஒருமுறை வீடு தேடி தேடி அலைந்துள்ளோம். குழந்தையாக இருக்கும் போதே பெற்றோர் சந்தித்த கஷ்டங்களை உணர்ந்தவள்’ நான் என்று அவர் கூறியுள்ளார். தற்போது அல்லு அர்ஜுனுடன் ஜோடியாக புஷ்பா 2ம் பாகம் படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.  மேலும் அவர் கூறும்போது, ‘எனது பெற்றோருக்கு சினிமா மீது ஆர்வம் கிடையாது. நான் நடிப்பது பற்றி எதுவுமே கேட்க மாட்டார்கள். சினிமா பார்க்கும் ஆவலும் அவர்களிடம் இல்லை. நான் நன்றாக சம்பாதித்து அவர்களை நன்றாக பார்த்துக்கொள்வது மட்டுமே எனக்கு சந்தோஷத்தை தரும். நான் எந்த விழாவுக்கு சென்றாலும் சாமி சாமி பாடலுக்கு ஆட சொல்கிறார்கள். எனக்கு பலமுறை அப்படி ஆடிப்பாடி, ‘போர்’ அடித்துவிட்டது. அதனால், இனிமேல் சாமி சாமி பாடலுக்கு ஆடக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்’ என்றார். சமீபத்தில் ரசிகர் ஒருவர், நான் உங்களை சந்தித்தால் சாமி பாடலுக்கு சேர்ந்து நடனம் ஆடுவோம் என கூறியிருந்தார். அதற்கு பதில் தரும்விதமாக இப்படி ராஷ்மிகா கூறியிருக்கிறார்.

Related Stories: